ஹென்ரிக் இப்சன் அவர்கள் நினைவு தினம்!
நவீன நாடக இலக்கியத்தின் தந்தை’ திரு.ஹென்ரிக் இப்சன் அவர்கள் நினைவு தினம்!.
நவீன நாடக இலக்கியத்தின் தந்தை ஹென்ரிக் இப்சன் 1828ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி தெற்கு நார்வேயின் ஸ்கியன் நகரில் பிறந்தார்.
இவர் சிறுவயதில் இருந்தே ஏராளமான கவிதைகள், இறையியல் நூல்களைப் படித்தார். விரைவில் கவிதை எழுதத் தொடங்கினார். பின்பு கேட்டிலினா என்ற நாடகத்தை எழுதி வெளியிட்டார். அதை தொடர்ந்து பல நாடகங்களை எழுதினார். இவரது எ டால்ஸ் ஹவுஸ் நாடகம் அதிகமாக அரங்கேற்றப்பட்ட நாடகங்களில் ஒன்றாகப் புகழ்பெற்றது.
ஏராளமான கவிதைகள் அடங்கிய தொகுப்பை 1871ஆம் ஆண்டு வெளியிட்டார். பல நாடகங்களை இயக்கி, தயாரிக்கவும் செய்தார். பிராண்ட் நாடகம் அதிக பாராட்டுகளைப் பெற்றதோடு வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
உளவியல் ரீதியான நாடகங்களை எழுதியதால் நாடகத் துறையின் ஃபிராய்ட் என வர்ணிக்கப்பட்டார். 1902, 1903, 1904ஆம் ஆண்டுகளில் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
தலைசிறந்த நாடக ஆசிரியர்களில் ஒருவர், நாடக இயக்குநர், கவிஞர் என பன்முகத்திறன் கொண்ட இவர் 78வது வயதில் 1906, மே 23 ஆம் தேதி அன்று மறைந்தார்.