ஆற்காடு அடுத்த மோசூரில் மண்டல பூஜை நிறைவு விழா!!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் மோசூர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ பஜனை கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மண்டல பூஜை விழா நடைபெற்று வந்த நிலையில் இறுதி நாளான நேற்று யாகசாலைகள் அமைத்து 108 ஓம திரவியங்கள் கொண்டு வேள்வி பூஜைகள் செய்து விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வாசு, பழனியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் குமரேசன் மதன், சரவணன், மதி , சம்பத் ,வாசு ,நந்தன் மற்றும் ஊர் பொதுமக்கள், விழா குழுவினர்கள், இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.