2025 மற்றும் 2026ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி!
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025 மற்றும் 2026ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார்.அப்போது ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
புதுச்சேரியில் கடந்த பத்தாம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாசநாதர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.அதன் பின்பு இன்று காலை சட்டப்பேரவை 2025- 2026 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
அதில் முக்கிய அம்சங்கள்:
பிரதமர் மோடியின் கனிவான ஆதரவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,
மத்திய அரசின் ஒத்துழைப்பு காரணமாக பல்வேறு சமூக நலத்திட்டங்களை கடந்த 4-ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.
ஏழை,எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அனைவரையும் உள்ளடக்கிய, சமச்சீர் ஆன பொருளாதார வளர்ச்சியை செயல்படுத்தி வருகிறது.
அரசின் நிதி ஆராதத்தின் பெரும் பகுதி ஊதியம், ஓய்வூதியம், கடன் மற்றும் வட்டி செலுத்துதல் ஆகியவை முக்கிய செலவினங்களுக்காக செலுத்தப்படுகிறது..
சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வனம் மற்றும் வனம் அல்லாத பகுதிகளில் 3- லட்சம் மரக்கன்றுகள் நடத்திட்டமிபட்டுள்ளது.
மரம் நடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் தொழில் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பொது மக்களுக்கு 1- லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும்…
பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 50 விழுக்காடு கொண்ட பசுக்கள் வழங்கப்படும்.
புதுச்சேரியில் உள்ள 2 அருங்காட்சியங்கள் மத்திய அரசின் உதவியுடன் புரணமைக்கப்படும்.
அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வரும் நிதியாண்டு முதல் இலவச அரிசியுடன் 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும்.
6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து இளநிலை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் விகிதம் 3 ஆண்டுகள் மாதம் தோறும் ஊக்குவிப்பு தொகையாக அரசு வழங்கும்.
அனைத்து விவசாயிகளுக்கும் மழைக்கால நிவாரணமாக இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ரூ.2000 வழங்கப்படும் .
அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வரும் நிதியாண்டு முதல் இலவச அரியுடன் 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும்..
மதிய உணவு திட்டத்தில் வார இருமுறை வழங்கப்படும் சத்துணவுடன் கூடிய முட்டை இனி வாரத்தில் அனைத்து நாட்களிலும் வழங்கப்படும்..
முதியோர் உதவி பெறும் மீனவ பெண்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் ஈமச்சடங்கு தொகை ரூபாய் 15 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.