பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா தலைவர் கடிதம்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் ஆவணங்களை பதிவுக்கு தாக்கல் செய்யும்போது அதற்குண்டான முந்தைய அசல் ஆவணத்தை (ORIGINAL DOCUMENT) பதிவாளரின் பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்கிற 55A சட்டப்பிரிவு சம்பந்தமான உத்தரவில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு, மக்களின் நலன் கருதி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தை பொறுத்தவரைக்கும் சொத்துக்களை வாங்குகின்ற பொதுமக்கள் அதனுடைய முந்தைய அசல் ஆவணத்தை பதிவு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற பதிவுத் துறையின் சட்டப் பிரிவு 55A வில் சட்ட திருத்தம் மேற்கொண்டு கடந்த 2021 இல் பதிவுத்துறை (சுற்றறிக்கை எண்:.22482/C1/2022.Dt.02.02.
மேலும் இக்கடிதத்தில் பதிவுத்துறை கூடுதல் துணைத் தலைவர் அவர்களின் கடித எண்: 44420/C1/2024, Dt.05.02.2025 வாயிலாக பிறப்பித்த உத்தரவினை வரவேற்று பதிவுத்துறையின் செயலினை பாராட்டி பெயிரா கூட்டமைப்பு சார்பாக பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தோம்.
இத்தருணத்தில் பதிவுத்துறை தலைவர் அவர்களால் அசல் ஆவணத்தை ஒளி வருடல் செய்வது சம்பந்தமாக ஒரு வழிகாட்டி நெறிமுறை சுற்றறிக்கை எண்: 2492 l CA1 / 2024 நாள்:25.01.2025 என்கிற அடிப்படையில் வெளியிட்டிருப்பது மேலும் சார் பதிவாளர்களுக்கு அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்வது குறித்த விஷயத்தில் ஏற்கனவே தெளிவான புரிதல் இல்லாத சூழலில் குழப்பத்தில் இருந்து வந்த சார் பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை கூடுதல் துணைத் தலைவர் அவர்களின் கடித எண்:44420/C1/2024 மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற வகையில் அமைந்துள்ளது.
அசல் ஆவணங்கள் இன்றி சொத்துக்களை பதிவு செய்யலாம் என்கின்ற உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவினாலும் மற்றும் பதிவுத் துறை கூடுதல் துணைத் தலைவர் அவர்களின் கடித எண்: 44420/C1/2024 இன் அடிப்படையிலும், அசல் ஆவணங்கள் பொதுமக்களிடம் இல்லை என்றாலும் பதிவுத்துறையினால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பொது ஆவணத்தின் (PUBLIC DOCUMENT) அடிப்படையில் பதிவு செய்யலாம் என்கின்ற அடிப்படையிலும் நிம்மதி அடைந்திருந்த பொதுமக்களுக்கு, தற்பொழுது பதிவுத் துறை தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அசல் ஆவணத்தை ஒளி வருடல் செய்வது சம்பந்தமான சுற்றறிக்கை எண்: 2492 l CA1 / 2024 நாள்:25.01.2025 இன் மூலம் பொதுமக்களும் குழப்பம் அடைந்து அவர்களின் சொத்துக்களை அவசர தேவைகளுக்கு கூட விற்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு இதன் காரணமாக பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.
மேலும் அசல் ஆவணங்களை தவறவிட்ட பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை பதிவு செய்ய இயலாததால் இதன் மூலம் பதிவுத் துறைக்கு வரும் வருவாயும் பெருமளவில் தடுக்கப்படுகிறது.
ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்கள், மேற்கண்ட பொதுமக்களின் நலனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, பதிவுத் துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கிற பொது ஆவணங்களின் (PUBLIC DOCUMENT) அடிப்படையிலும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலும், அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும், பதிவுத் துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கிற பொது ஆவணங்களை (PUBLIC DOCUMENT) சரிபார்த்து பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுந்த வழிகாட்டி நெறிமுறைகளுடன் சுற்றறிக்கையினை வெளியிட்டு உதவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.