என்ன ரூ.50 கோடி மோசடியா?..நடிகை தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சம்மன்?

Loading

ரூ.50 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் நடிகை தமன்னா மற்றும் காஜல் அகர்வாலுக்கு சம்மன் அனுப்பி விசாரணை அழைக்க புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் சுமார் ரூ.2 கோடியே 40 லட்சம் ரொக்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பாக புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோகன் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமா நடிகை தமன்னா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பங்கேற்ற தொடக்க விழாவுடன், கோவையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2022-ம் ஆண்டு இந்த கிரிப்டோ கரன்சி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, 3 மாதங்களுக்குப் பிறகு சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வால் பங்கேற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதலீடு செய்தவர்களின் தொகைக்கு ஏற்ப, நடிகை காஜல் அகர்வாலை வைத்து 100 நபர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியுள்ளனர் என்றும் அதேபோல, மும்பையில் கப்பலில் மிகப்பெரிய விழாவை நடத்தி, அதன்மூலம் ஆயிரக்கணக்கானோரிடம் பணத்தை திரட்டியுள்ளனர் என்றும் இந்த சம்பவம் தொடர்பாக நிதிஷ் ஜெயின்,36, அரவிந்த் குமார்,40, ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கிரிப்டோகரன்சி மோசடிதொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். துவக்க விழா மற்றும் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று விளம்பரப்படுத்தியதால், இருவரும் பங்குதாரர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் கிரிப்டோகரன்சி நிறுவன திறப்பு விழாவில் பங்கேற்றதற்காக தமன்னாவுக்கு ரூ.25 லட்சமும், காஜலுக்கு ரூ.18 லட்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

0Shares