ஒரு வழிப்பாதை என தமிழில் அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை:

Loading

ஒரு வழிப்பாதை என்று தமிழில் அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை:
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா துவங்கியுள்ள நிலையில்,கோவை மற்றும்
உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு, வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம், மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் உதகை சேரிங்கிராஸ் உதகை குன்னூர் சாலை ,பிளாக்பிரிட்ஜ் பகுதி,குன்னூர் ஆகிய பகுதிகளில் இருந்து  கோத்தகிரி வழியாக ஒரு வழிப்பாதை மாற்றப்பட்டுவாகனங்கள் செல்லும் நிலையில்,
வெலிங்டன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிளாக்பிரிட்ஜ் பகுதியில் இருந்து பேரக்ஸ்,  சிம்ஸ்பார்க் பகுதி வழியாக கோத்தகிரி வழியில்   ஒருவழிப்பாதையில் வாகனங்கள் செல்லும் நிலையில் இந்த பகுதியில் காவல் துறை சார்பாக வைக்கப்பட்டுள்ள பேரிகார்டில் ஒரு வழிப்பாதை என  ஆங்கிலத்தில் மட்டும் அறிவிப்பு பேனர் வைக்கபட்டுள்ள நிலையில், இந்த சாலையில் வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் அனைவருக்கும் ஆங்கிலம் தெரியும் என்பது சாத்தியம்  இல்லை ,உண்மையும் இல்லை.
ஆகவே ஆங்கிலம் தெரியாத வாகன ஓட்டிகள் தமிழில் படித்து தெரிந்து கொண்டு செல்வதற்கு  (இது ஒருவழிப்பாதை இந்த வழியாக கோத்தகிரி, கோவை மாவட்டம் செல்லும் வழி ) என்று  தமிழில் அறிவிப்பு பேனர் வைக்க,
 காவல் துறை பொது மக்களின் நண்பன் என்ற வாசகதிற்கு ஏற்ப,பொது மக்களை காப்பதே முதல் பணி   என்று மிகச் சிறப்பாக பணியாற்றி வரும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள், பொது மக்கள், மற்றும்
சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *