சினிமாவில் மீண்டும் பஹத் பாசிலுக்கு ஜோடியானார் நஸ்ரியா

Loading

சினிமாவில் மீண்டும் பஹத் பாசிலுக்கு ஜோடியானார் நஸ்ரியாஜித்து மாதவன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ரோமாஞ்சம்’. சௌபின் ஷாஹிர், செம்பன் வினோத், அர்ஜுன் அசோகன், அசீம் ஜமால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வெறும் ரூ.5 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானது. ரூ.60 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் அடுத்ததாக நடிகர் பஹத் பாசிலுடன் இணைந்து புதிய படத்தை இயக்குகிறார்.இதில் நஸ்ரியா நாசிம் ஹீரோயின். இப்படத்திற்கு ஷமிர் தாஹிர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த அறிவிப்பை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பஹத் பாசில் படப்பிடிப்பு தொடங்கியது என பதிவிட்டுள்ளார்.பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்தார் நஸ்ரியா நாசிம். பின்னர் அவர் நடிக்க வந்துவிட்டார். திருமணத்துக்கு முன் பஹத் பாசிலுடன் இணைந்து மலையாள படத்தில் நஸ்ரியா நடித்திருக்கிறார்.

திருமணத்துக்கு பிறகு இந்த படத்தில்தான் இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *