தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பாக சர்வதேச மகளிர் தின விழா கருத்தரங்கம் :
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், ஈக்காடு கிராமத்தில் தொட்டிக்கலை வட்டார பெண்கள் இணைப்பு குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழா கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு பேசினார்.திருவள்ளுர் மாவட்டத்தில் ஈக்காடு கிராமத்தில் தொட்டிக்கலை வட்டார பெண்கள் இணைப்பு குழு மூலம் நடத்தப்பட்ட அகில உலக பெண்கள் தினம் கருத்தரங்கில் சர்வதேச மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சிறப்பான கருத்தரங்கினை ஏற்பாடு செய்தமைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். 1917-க்குப்பின் உலக மகளிர் அமைப்புக்கள் ஒன்று கூடி மகளிர் தினத்தினை மார்ச் 8 என்று கட்டமைத்து அன்று முதல் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த மகளிர் தின நன்னாளில் பெண்ணின் பெருமையைப் பற்றி இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண் குழந்தைகளைக் கற்பித்து ஊக்குவித்து சமூக வளர்ச்சிக்கு ஒரு நல்ல அடித்தளத்தை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும். விளிம்பு நிலையிலிருக்கும் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கி ஊக்குவித்து வருகிறது. எனவே, இந்த வாய்ப்புக்களை பயன்படுத்தி சமுதாயத்தில் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் மன உறுதி பெற்று வாழ்வில் முன்வர வேண்டும். தன்னையும் காத்து தன்னைச் சார்ந்தோரையும் காத்து தகுதியான புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ வேண்டும் என்று கூறினார்.அதனைத் தொடர்ந்து, தொட்டிக்கலை வட்டார பெண்கள் இணைப்பு குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற விழாவில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை முன்னிட்டு சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தொட்டிக்கலை வட்டார பெண்கள் இணைப்புகுழுசார்பாஅமைக்கப்பட்ட சிறுதானிய உணவு கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து, பார்வையிட்டார். மேலும், இவ்விழாவில் வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பாக சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை முன்னிட்டு தொட்டிக்கலை வட்டார பெண்கள் இணைப்பு குழுவைச் சேர்ந்த 150 உறுப்பினர்களுக்கு சிறுதானிய விதைகள் மற்றும் பல்வேறு பழ மரக்கன்றுகளையும் மாவட்ட ஆட்சியர் இலவசமாக வழங்கினார்.இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் பெ.சாந்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.