பொங்கல் பரிசில் மண்பானை , மண் அடுப்பு வழங்கிட கோரி தொழிலாளர்கள் சங்கம் ஆர்பாட்டம்.

Loading

பொங்கல் பரிசில் மண்பானை , மண் அடுப்பு வழங்கிட கோரி தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் ஆர்பாட்டம்.
  தமிழக அரசு  ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி , பருப்பு , சர்க்கரை போன்ற பொருட்களுடன் வேட்டி , சேலைகள் பொங்கல் பரிசாக வழங்கி வருகிறது.அதோடு மண்பானையும் , மண் அடுப்பு ஒன்றும் வழங்கிட வேண்டும் .
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பாண்டங்கள் செய்வதற்குரிய களிமண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ள அரசாணை வழங்கிட வேண்டும் .போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி    தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பாக  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மாநில, மாவட்ட ,  நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் நிகழ்ச்சி கலந்து கொண்டனர்.தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் மாநிலத் தலைவர் சேம.நாரயணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில்  மாநில ,மாவட்ட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *