பட்டா வழங்ககோரி ஆட்சியரிடம் மனு அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
கோவையில் கடந்த 80 ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்ககோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்த விடுதலை சிறுத்தை கட்சியினர் கடந்த 80 ஆண்டுகளாக கோவை சுந்தராபுரம் அடுத்த குறிச்சி, சில்வர் ஜூப்ளி விதி, கிணறு வீதி பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, இருப்பிட சான்றிதழ், என அனைத்து ஆவணங்கள் இருந்தும் அருந்ததியின மக்கள் என்ற ஒரே ஒரு காரணத்தினால் பட்டா வழங்க மறுத்து வருகின்றனர். எனவே உடனடியாக அந்த பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு இந்த பகுதி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு அளிக்கும் நிகழ்ச்சியினை விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்பு செயலாளர் சுசி கலையரசன் தலைமையில் நடைபெற்றது.இதில் விடுதலைப் சிறுத்தைகள் கட்சியின் தொண்டாமுத்தூர் தொகுதி செயளாளர் முகமது அலி, குறிச்சி சில்வர் ஜூப்ளி வீதி முகாம் செயளாளர் மூர்த்தி, முகாம் துணை செயலாளர் அருண்குமார், காளியப்பன், சின்னப்பன், சேகர், முருகன், முருகேஷ், காளியம்மாள், பூங்கொடி, கஸ்தூரி, ரேணுகா தேவி, நாகமணி, பாப்பம்மாள், நீலாவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.