காட்பாடி மகளிர் பள்ளிக்கு ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் 3 இலட்சம் மதிப்பீட்டில் கழிவறை வசதி
வேலூர் மாவட்டம் நானும் முதலாளி வேலூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா காட்பாடி காந்திநகர் மகளிர் மன்றத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பொன்னை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு ரூபாய் மூன்றுஇலட்சத்தில்புதியகழிவறை கள் கட்ட நிதி உதவியும், தையல் இயந்திரமும் வழங்கப்பட்டன. மேலும் சுயதொழில் தொடங்க நான்குமகளிர்சுயஉதவிகுழுக்களுக் கு தையல் இயந்திரங்களையும் சென்னை மாவட்ட இன்னர்வீல் சங்க தலைவி அரசிபொன்மொழி வேலூர் மாநகராட்சியின் முதல் மண்டல தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் அவர்களும் இணைந்து வழங்கினர்.
இவ்விழாவிற்கு ஏஞ்சல்ஸ் சங்க தலைவி அருளரசிபாபு தலைமை தாங்கினார். முன்னதாக செயலாளர் இமாலினிசரவணன் வரவேற்று பேசினார்.பொருளாளர்லோகநாயகிதயா நிதி முன்னிலை வகித்து பேசினார்.ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் கே.ஜி.தாமோதரன், வேலூர்முத்துரங்கம்அரசுகலைக்கல் லூரின் ஓய்வு பெற்ற பேராசிரியை கலைச்செல்வி செல்லப்பா, இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடிகிளைஅவைத்தலைவர்செ.நா. ஜனார்த்தனன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.