20 ஆண்டுகாலம் சொந்த கட்டிட வீடுகளில் வசித்து வரும் 40 துக்கும் மேற்பட்ட வீடுகளை விட்டு வெளியேறச் சொல்லும் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள்
20 ஆண்டுகாலம் சொந்த கட்டிட வீடுகளில் வசித்து வரும் 40 துக்கும் மேற்பட்ட வீடுகளை விட்டு வெளியேறச் சொல்லும் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள். புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியான நாவர்குளம் வாசன் நகர் பகுதியில் உள்ள வீடுகளை அப்புறப்படுத்த நிறைந்த வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் லாஸ்பேட்டை காவல் துறையினர். அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் அங்கேயே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். எந்த ஒரு அறிவிப்பும் இன்றி வெளியேறச் சொன்னால் நாங்கள் எங்கு செல்வது. அதிகாரிகளின் பதில் இங்கு விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெறப்போகிறது. நாங்கள் பல லட்சம் கொடுத்து நிலம் வாங்கி பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வசித்து வருகிறோம்.
திடீரென்று எங்களை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னால் நாங்கள் குழந்தைகள் முதியோர்களை எங்கு அழைத்துச் செல்வது. எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி முதல்வர் அவர்களும் ஆளுநர் அவர்களும் அமைச்சர் பெருமக்களும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத அளவிற்கு அங்கேயே நாங்கள் வசிப்பதற்கு அரசு உறுதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.