மெரினா கடற்கரை சாலையில் கார்-ஆட்டோ மோதல்; 2 பேர் படுகாயம்

Loading

சென்னை சென்னை கீழ்ப்பாக்கம் கண்ணகி சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது முதின் (வயது 32). இவர், கட்டுமான தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் மெரினா கடற்கரை சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை பல்கலைக்கழக அலுவலகம் அருகே வந்துபோது, அந்த வழியே முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது இவரது கார் மோதியது.

இதில் ஆட்டோ டிரைவர் குமார் (வயது 59) மற்றும் உடனிருந்த பாபு (35) இருவரும் படுகாயமடைந்தனர். அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த முகமது முதின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *