புரட்சித்தலைவி பசுமைத் தமிழகம் நிறுவனர் VN சுந்தர்ராஜன் அதிமுகவில் தற்போது நிலவி வரும் தலைமை யுத்தம் மற்றும் பொதுக்குழு முடிவுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு

Loading

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் கட்டிக்காத்த இயக்கம் இது. அதிமுக ஆலமரம் போன்றது அதை எத்தனை ஆயிரம் வருடங்கள் ஆனாலும் யாராலும் அசைத்துக் கூட பார்க்க முடியாது ! என்று கூறியவர் அம்மா அவர்கள்..

கட்சியின் அடிப்படை உறுப்பினர் களே அதிமுக வின் வேர் ஆவார்கள். நான் 40 வருடங்களாக அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இருக்கிறேன்.
நான் எந்த அரசியல் கட்சி மற்றும் பதவிகளுக்கும் ஆசைப்பட்டதில்லை.
இந்த இயக்கம் எந்த அரசியல் அமைப்பும் சார்ந்ததல்ல.. நலத்திட்டங்கள் பல இந்த அறக்கட்டளையின் மூலம் செய்து வருகிறேன்.

தலைவர்கள் நிர்வாகிகள் என அனைவரையும் சந்தித்து பிரச்சினைகளை தீர்த்து முழுமையான ஒற்றுமையான அதிமுக வாக மாற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் .

கட்சியின் பொதுச் செயலாளர் துணை பொது செயலாளர் என அனைவரும் அடிப்படை உறுப்பினர்களாளே தேர்வு செய்ய வேண்டும் .
நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் ஆக இருப்பதையே விரும்புகிறேன்..

அதிமுக வை பொருத்தவரை அம்மாவே நிரந்தர பொதுச்செயலாளர். வேறு யாரும் அந்த பதவியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை ..
வேண்டும் என்றால் துணை பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படலாம்.அதை அந்தந்த மாவட்ட அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்ய வேண்டும்.
அதே முறையில் நகர செயலாளர்கள் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

மாவட்டம்தோறும் சென்று அந்தந்த மாவட்ட தலைவர்களை சந்தித்து எல்லா பிரச்சனைகளையும் சரி செய்ய பசுமை தமிழகம் இயக்கம் பாடுபடும்..
வேண்டுமென்றால் பிரச்சனைகள் தீர நீதிமன்றம் நாடவும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.நான் EPS கோ அல்லது OPS க்கோ TTV தினகரனுக்கோ ,சசிகலா வுக்கோ தனிப்பட்ட முறையில் ஆதரவானவன் இல்லை. அனைவருக்கும் பொதுவானவன்..

இப்போது அதிமுக வில் நடப்பது ஒரு குடும்பத்தில் நடக்கும் சண்டை போன்றது.இந்த நிலை விரைவில் மாறி மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுக வாக வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்…

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *