தலைவாசல் அருகே விவசாய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா விவசாயிகள் மகிழ்ச்சி…!
சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் வரகூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு புதிதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக சேலம் மண்டலத்தில் சார்பாக நேரடி கொள்முதல் நிலைய பொறுப்பாளர் திரு.சுரேஷ் குமார் அவர்களின் தலைமையில் தி.மு.க தலைவாசல் ஒன்றிய பொறுப்பாளர் மணி ( எ) பழனிச்சாமி அவர்களின், முன்னாள் ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜெயபால் அவர்களின் தலைமையில் விவசாயிகளுக்கு புதிதாக திறக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் வரகூர் நெல் கொள்முதல் பொறுப்பாளர் திரு.நேரு, வரகூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் மணிகண்டன், ஊராட்சி மன்ற ஒன்றிய குழு உறுப்பினர் சுதா பொன்னுசாமி, புத்தூர் ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெயமணி சங்கரையா,சாத்தப்பாடி ஊராட்சி செயலாளர் ராஜா, சார்வாய் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன், புதூர் ஊராட்சி செயலாளர் தமிழ்செல்வன் ,வரகூர் முன்னாள் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பெருமாள், வார்டு உறுப்பினர்கள் மாணிக்கம் ,பெரியம்மா திமுக கிளைச் செயலர்கள் மற்றும் பொதுமக்கள் சிறு குறு விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு.விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.