195கோரிக்கைமனு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்தகவல்
![]()
திருவள்ளூர்
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் பொதுமக்களிடம் 195 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதற்கு தீர்வுக்கான அலுவலர்களிடம்
உத்தரவிட்டார்:
திருவள்ளூர் டிச 02 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பொதுமக்களிடம் இருந்து 195 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதற்கு தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார்.
இம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 195 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 53 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 39 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 35 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 32 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 36 மனுக்களும் என மொத்தம் 195 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் 9 பயனாளிகளுக்கு தலா ரூ. 500000 வீதம் ரூ.45 இலட்சம் மானியத்தில் ரூ.97.50 இலட்சம் மதிப்பிலான நிலத்திற்கான ஆவணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
முன்னதாக, சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளி களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற 25 மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட் டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) பாலமுருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா ராணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) சரண்யா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

