நீதிமன்றவளாகத்தில் குழந்தைகள் விளையாட்டு அறை

Loading

தேனி மாவட்டம்

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகள் விளையாட்டு அறையினை  (Child Friendly Room) தேனி முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு              திரு.சொர்ணம் ஜெ.நடராஜன் அவர்கள்  மற்றும்   தேனி அமர்வு நீதிபதி      திருமதி ஜிஅனுராதா அவர்கள் திறந்து வைத்தார்கள்.

தேனி மாவட்டம்,  லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்,   (27.11.2025) அன்றுகுழந்தைகள் விளையாட்டு அறையினை  (Child Friendly Room) தேனி முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு திரு.சொர்ணம் ஜெ.நடராஜன் அவர்கள் மற்றும்  தேனி அமர்வு நீதிபதி திருமதி ஜிஅனுராதா அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில் தேனி முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் தெரிவித்ததாவது,

தேனி மாவட்ட நீதித்துறையில் பணிபுரியும் நீதிபதிகள், பணியாளர்களின் குழந்தைகள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர் எழுத்தர்களின் குழந்தைகள் ஆகியோர் பயன்பெறும் வகையில், குழந்தைகள் விளையாட்டு அறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகள் விளையாட்டு அறையானது GSICC (Gender Sensitization and Internal Complaints Committee)-பராமரிப்பின் கீழ் செயல்படும்.

இதனை நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நூலகம் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை மையத்தினை திறப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தேனி முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள்  தெரிவித்தார்.

இந்நிகழ்வில்,  நிரந்தர மக்கள் நீதிமன்ற சேர்மன் திருமதி.ஏ.கே.கே.ரஜினி, போக்சோ அமர்வு நீதிபதி திரு.பி.கணேசன், பெரியகுளம் கூடுதல் மாவட்ட நீதிபதி திரு.சி.சங்கர், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திருஜி.என்.சரவணக்குமார், சார்பு நீதிபதி திருமதி ஆர்.கீதா, இலவச சட்ட உதவி மைய திருமதி எம்.பரமேஸ்வரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி திரு.எஸ்.அலெக்ஸ்ராஜ், நீதித்துறை நடுவர்கள் திரு.பிஆசை மருது, செல்வி.டி.ஜெயபாரதி, வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

0Shares