சாலை விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்கா,

Loading

திருவள்ளூரில் ரூ.3.01 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்கா, முதல்வர் படிப்பகம் : அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டார் :

திருவள்ளூர் நவ 27 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறை இணைந்து சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.01 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்காவினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் பார்வையிட்டு மின்கல இரயில் உறுதியில் மாணவர்களுடன் பயணம் மேற்கொண்டார் .

தொடர்ந்து சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.2.51 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட முதல்வர் படிப்பக கல்வெட்டை திறந்து வைத்து போட்டி தேர்வுகளுக்கு பயில வந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்பு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கருணை அடிப்படையில் 10 நபர்களுக்கு அலுவலக உதவியாளர் மற்றும் 13 நபர்கள் கிராம உதவியாளர் பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கி பேசினார்.திருவள்ளூர்  மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பூங்காவை மிகக் குறுகிய காலத்தில் சிறப்பான முறையில் வடிவமைத்து அந்த வடிவு அமைப்பின் இந்த பூங்காவில் அறிவியல் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் முதல்வரின் படிப்பகம் என்ற தலைப்பில் தொடங்கப்பட்டிருக்கிறது மாணவச் செல்வங்கள் வருங்காலங்களில் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக,அறிவியல் சார்ந்த அதேபோன்று ஒன்று கூடி போட்டி தேர்வுகளில் படிப்பதற்கான வசதிகள் வடிவமைப்பை மாவட்ட ஆட்சியர் வடிவமைத்துள்ளார்.

திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடங்கி வைத்தோம் மாணவச் செல்வங்கள் பயன்பாட்டிற்காக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பூங்கா அமைப்பதற்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.

இதில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயகுமர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.வெங்கட்ராமன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares