மேம்படுத்தப்பட்ட ஐம்புலன்கள் ஒருங்கிணைப்பு பூங்கா
![]()
திருவள்ளூரில் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு மையத்தில் மேம்படுத்தப்பட்ட ஐம்புலன்கள் ஒருங்கிணைப்பு பூங்கா : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் திறந்து வைத்து, குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார் :
திருவள்ளூர் நவ 24 : திருவள்ளுர் ஜே.என்.சாலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு மையத்தில் மேம்படுத்தப்பட்ட ஐம்புலன்கள் ஒருங்கிணைப்பு பூங்காவை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் திறந்து வைத்து, குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து குழந்தைகளை போலவும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளும் சமூகத்தில் எந்த வேறுபாடுகளும் இன்றி செயல்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியாக்கரம் திட்டத்தின் கீழ் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மையத்தின் முக்கிய சேவைகள், பிறந்த பச்சிளம் குழந்தைகளில் பிறவி குறைபாடுகள் இருப்பதா என்று பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சை வழங்குதல், சிறு குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், ஊட்டச்சத்து மற்றும் விட்டமின் குறைபாடுகளை கண்டறிந்து மேலாண்மை செய்தல்.
2018 முதல் இதுவரை வழங்கப்பட்ட சிகிச்சைகள், இருதய அறுவை சிகிச்சை பெற்ற குழந்தைகள் – 473, செவிக்குறைபாடு உடைய குழந்தைகளுக்கு Cochlear Implant Surgery – 28, கண் பார்வை குறைபாடு ஏற்படுத்தும் ROP லேசர் சிகிச்சை – 51, பிறவி கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சை-28, உதடு, அன்னப்பிளவு சீரமைப்பு – 125, உயரக்குறைவு உள்ள குழந்தைகளுக்கு வளர்ச்சி ஹார்மோன் ஊசி – 46, பிறவி குறைபாடுள்ள குழந்தைகளுக்கான உதவி உபகரணங்கள் – 66, கடந்த ஓராண்டில் மட்டும் 17,693 பயனடைந்த குழந்தைகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.
வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில், மையத்தில் ஏற்கனவே இருந்த புலன்கள் ஒருங்கிணைப்பு பூங்கா, பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தப்பட்டது.
பூங்காவின் சிறப்பம்சங்கள், பல நிறங்களில் வடிவமைக்கப்பட்ட விளையாட்டு பகுதிகள் – பார்வை உணர்வு மற்றும் புலன்கள் தூண்டுதலுக்கு உதவும், தொடு உணர்வை தூண்டும் தரை & பாதை அமைப்புகள் – நரம்பு செயல்பாட்டை மேம்படுத்தும், பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் – தசை வலு மற்றும் நரம்பு ஒருங்கிணைப்பு மேம்பாடு, புலன்கள் ஒருங்கிணைப்பு பயிற்சி -குழந்தைகள் தங்களின் சொந்த உணர்வுகளை பயன்படுத்தி செயல்பட உதவும், பசுமை சூழல் – மனவளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் உதவும். கூடுதலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.15 இலட்சம் நிதி உதவிகளை வழங்கியுள்ளார்கள். அதனை பெற்று பிற பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
பூங்காவின் சிறப்பம்சங்கள், பல நிறங்களில் வடிவமைக்கப்பட்ட விளையாட்டு பகுதிகள் – பார்வை உணர்வு மற்றும் புலன்கள் தூண்டுதலுக்கு உதவும், தொடு உணர்வை தூண்டும் தரை & பாதை அமைப்புகள் – நரம்பு செயல்பாட்டை மேம்படுத்தும், பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் – தசை வலு மற்றும் நரம்பு ஒருங்கிணைப்பு மேம்பாடு, புலன்கள் ஒருங்கிணைப்பு பயிற்சி -குழந்தைகள் தங்களின் சொந்த உணர்வுகளை பயன்படுத்தி செயல்பட உதவும், பசுமை சூழல் – மனவளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் உதவும். கூடுதலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.15 இலட்சம் நிதி உதவிகளை வழங்கியுள்ளார்கள். அதனை பெற்று பிற பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜே. ரேவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு, அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் என்.திலகவதி, குழந்தைகள் நலப்பிரிவு துறைத்தலைவர் சிவராமன், இடையிட்டு சேவை மைய துறை தலைவர் ஜெகதீஷ் குமார். நிலைய மருத்துவ அலுவலர் ராஜ்குமார், மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

