3699 வாக்குச்சாவடிகளில் 22,23 தேதி உதவி மையங்கள்

Loading

வாக்காளர்களுக்கு உதவும் வகையில் 3699 வாக்குச்சாவடி மையங்களில் 22,23 ஆகிய நாள்களில் உதவி மையங்கள் : திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் நவ 22 : இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 அமல்படுத்தப்பட்டு, வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து, திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி,பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி,மதுரவாயல்,அம்பத்தூர், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தினை பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் விரைந்து வழங்குமாறு திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
மேற்படி கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்கள் பூர்த்தி செய்வதில், சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின், இதன் பொருட்டு,3699 வாக்குச்சாவடி மையங்களில் 22.11.2025 மற்றும் 23.11.2025 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உதவி மையங்கள் செயல்பட உள்ளது.
இவ்வுதவி மையங்களை அனைத்து வாக்காளர்களும் முழுமையாக பயன்படுத்தி தங்களுக்குண்டான கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து தீர்வு பெற்று கொள்ளுமாறும், மேலும், மேற்படி மையங்கிலேயே பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களையும் வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அளிக்கலாம் எனவும் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares