அமைச்சர் சா.மு.நாசர், ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு
![]()
திருவள்ளூர் நவ 09 :
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சிக்கான இடத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் : அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி, சுந்தரசோழபுரம் பகுதியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சிக்கான இடத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுந்தரசோழபுரம் பகுதியில், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தல் மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைப்பெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அனைத்து பணிகளையும் சிறப்பான முறையில் குறித்த காலத்தில் முடிக்க துரிதமாக செயல்பட சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறித்தினார்.
இதனைத்தொடர்ந்து, ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய அரசு பணியாளர் தனியார் குடியிருப்பு பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கணக்கெடுப்பு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பு படிவங்களை விரைந்து வழங்கி பணிகளை முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் உத்தரவிட்டார்.இதில் ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார் அவர்கள், ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா,திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, திருவேற்காடு நகராட்சி ஆணையர் ராமர், வாக்குப்பதிவு அலுவலரும் ஆவடி மாநகராட்சி துணை ஆணையருமான மாரிசெல்வி, உதவி வாக்குப்பதிவு அலுவலரும் ஆவடி வட்டாட்சியருமான கண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

