பூமாலை வணிக வளாகம் மு.பிரதாப் திறந்தார்

Loading

திருவள்ளுர்

திருவள்ளுர் மாவட்டம், ஜே.என் சாலையில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாக கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும்  இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜவேல், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் செல்வராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை வேதவல்லி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares