தி.மு.கழக உறுப்பினர் சேர்க்கை..பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

Loading

உடன்பிறப்பே வா”புதுச்சேரி மற்றும் புதுச்சேரி-காரைக்கால் மாநிலதி.மு.கழக உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளது என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிடுள்ளார்.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாசிச ஆதிக்கத்திலிருந்தும், அதற்கு துணை நிற்கும் புதுச்சேரி பா.ஜ.க. கூட்டணி அரசிடமிருந்தும் மாநிலத்தை மீட்டு, புதுச்சேரியின் ‘மண்-மொழி-மானம்’ காக்க, கழகத்தின் சார்பில் “உடன்பிறப்பே வா” பரப்புரை முன்னெடுக்கப்படும்.

புதுச்சேரியின் 30 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, பாசிச பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின் அவலங்களைச் சொல்லி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களைக் கழக உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும்.

இப்பணியை ஒருங்கிணைத்துச் செயலாற்ற, கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் திரு.எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., அவர்கள் தலைமைக் கழகத்தால் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

புதுச்சேரி மற்றும் புதுச்சேரி-காரைக்கால் மாநிலக் கழகத்தின் மாநில – தொகுதி – வட்ட – ஊர்க்கிளை, உட்கிளை கழகச் செயலாளர்கள் என அனைவரும் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தில் முழு மூச்சோடு இணைந்து பணியாற்றி, மாநிலத்தின் 30% வாக்காளர்களைக் கழக உறுப்பினராக்கிட வேண்டும் என்ற இலக்கை அடைந்திட வேண்டும்.என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிடுள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களை, இன்று (27.9.2025), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் புதுச்சேரி மற்றும் புதுச்சேரி-காரைக்கால் மாநில தி.மு.கழக உறுப்பினர் சேர்க்கை பணியினை ஒருங்கிணைத்துச் செயலாற்ற, தலைமைக் கழகத்தால் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் திரு.எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதுபோது, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.இராசா, எம்.பி., கனிமொழி கருணாநிதி, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாண்புமிகு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

0Shares