தொடர் வேலை நிறுத்தம்; ரூ.7 கோடி வருவாய் இழப்பு!

Loading

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடந்த 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் ரூ.7 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்,ஆனாலும் இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.

இதனிடையே 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்துமீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.அதேபோல கடந்த 2 மாதத்தில் மட்டும் 55-க்கும் மேற்பட்ட பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடந்த 11-ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்றுடன் 7-வது நாளை எட்டியுள்ளது. 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் வரிசையாக அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி என்ற விகிதத்தில் நேற்று வரை ரூ.7 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

0Shares