1-ந் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம்… கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் !

Loading

தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவன பிளாண்டுகளில் இருந்து இயங்கும் சிலிண்டர் லாரிகள் வருகிற 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.இதனால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கேஸ் சிலிண்டர்கள் நாடு முழுவதும் விநியோகப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் நாடு முழுதும் கொண்டு செல்லப்படுகிறது. மக்களுக்கு இந்த சிலிண்டர்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது .

இந்தநிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 12 இடங்களில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்கள் நிரப்பும் பிளாண்டுகள் உள்ளது. இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ஒப்பந்தப்படி லோடு கொடுப்பதில்லை என கூறப்படுகிறது . மேலும் போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளதால் அபராதம் விதிக்கப்படுகிறது.இதனால் தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவன பிளாண்டுகளில் இருந்து இயங்கும் சிலிண்டர் லாரிகள் வருகிற 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.இதனால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு எல்.பி.ஜி. கியாஸ் சிலிண்டர் லாரிகள் உரிமையாளர் சங்கத் தலைவர் செந்தில் செல்வன் கூறும்போது:-இது சம்பந்தமாக பெருந்துறையில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படாதால் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

0Shares