தும்மனட்டி ஊராட்சியில் நடமாடும் நியாயவிலைக்கடை.. கொறடா ராமச்சந்திரன் திறந்து வைத்தார்!

Loading

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சி, பேரார் கிராமத்தில் நடமாடும் நியாய விலைக் கடையினை ) அரசு தலைமைக் கொறாடா கா.ராமச்சந்திரன் அவர்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

பின்னர், அரசு தலைமைக் கொறாடா அவர்கள் தெரிவித்ததாவது:-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களுக்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில், கூட்டுறவுத்துறையின் சார்பில், முழு நேர, பகுதி நேர மற்றும் நடமாடும் நியாயவிலைக்கடை அங்காடிகளை வழங்கி வருகிறார்கள்.

அதன்படி நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகச்சாலைக்கு சொந்தமான நியாயவிலைக் கடை 366 குடும்ப அட்டைகளுடன் மடித்தொரை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. பேரார், ரங்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 200 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இப்பகுதி மக்கள் சுமார் 3 கி.மீ தொலைவிற்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர். இப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று. பொதுமக்களின் நலன் கருதி நடமாடும் நியாய விலைக் கடையினை பேரார் பகுதியில் துவங்கிடவும், வாரத்தில் மூன்று நாட்கள் அங்கு செயல்பட புதிதாக நடமாடும் நியாய விலைக்கடை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள் இந்த நடமாடும் நியாய விலைக்கடை அங்காடி மூலம் அத்தியாவசிய பொருட்களை பெற்று பயன் பெற வேண்டும் என அரசு தலைமைக் கொறாடா அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், மாவட்ட வழங்கல் அலுவலர் .சரவணன், கூட்டுறவு சார் பதிவாளாகள் கௌரிசங்கர், சுப்ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares