ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தூர்வாரி ஆழப்படுத்தும் பணி..சபாநாயகர் தொடங்கி வைத்தார்!

Loading

புதுவை மணவெளி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம் அரியாங்குப்பம் வட்டாரம் சார்பாக மணவெளி தொகுதி டி என் பாளையம் இடையார்பாளையம் டோல்கேட் ஆகிய பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 47.77 லட்சம் மதிப்பில் பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவைத் தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்கள் இன்று 26.06.2025 தொடங்கி வைத்தார்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மணவெளி சட்டமன்றத் தொகுதி டி என் பாளையம் பகுதியில் ரூ.20.00 லட்சம் மதிப்பில் மலட்டாறு மதகு முதல் நாவப்புனூர் வழி வரை உள்ள மலட்டாறு கரையை வலுப்படுத்துதல், இடையார்பாளையம் பகுதியில் ரூ.25.28 லட்சம் மதிப்பில் சங்கராபரணி ஆற்றங்கரையை வலுப்படுத்துதல், மற்றும் டோல்கேட் பகுதியில் உள்ள எறா குட்டையை ரூபாய் 2.49 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல் ஆகிய பணிகளை சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு நேரில் சென்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி திரு கார்த்திகேசன் இளநிலை பொறியாளர் திரு சிவஞானம் பணி ஆய்வாளர் கணேசன் மற்றும் பி என் பாளையம் பகுதி மனோகரன் சுகாதியா கிரிகரன் தேசிகன் வீர செல்வம் வீரபாலன் கண்ணன் ஜெயமூர்த்தி மற்றும் இடையார்பாளையம் பகுதி நாகராஜ் அர்ஜுனன் டோல்கேட் பகுதி காமராஜ் எஸ் வி எஸ் குமரன் பிரியா மோத்திலால் சக்திவேல் உள்ளிட்ட அந்தந்த பகுதி முக்கிய பிரமுகர்கள்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0Shares