இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய விதிகள்: மத்திய அரசு அறிவிப்பு!
இருசக்கர வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, இனி புதிய பைக்குகளுடன் 2 ஹெல்மெட்கள் வழங்குவது கட்டாயம் எனபுதிய பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இருசக்கர வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.இது, மோட்டார் வாகன விதிகள் 1989-ல் முன்மொழியப்பட்ட புதிய திருத்தமாகும்.
இந்த விதிகளின் படி இரண்டு ஹெல்மெட்கள் வழங்குதல் கட்டாயம்,வாகன உற்பத்தியாளர்கள் விற்கும் ஒவ்வொரு புதிய இருசக்கர வாகனத்துடனும் 2 ஹெல்மெட்கள் வழங்க வேண்டும்,ஹெல்மெட்கள் BIS தரநிலைக்கேற்ப இருக்க வேண்டும்,மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 129-இன் கீழ் விலக்கு உள்ளவர்களுக்கு மட்டும் விதி பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.
ABS (Anti-lock Braking System) கட்டாயம் – 2026 முதல்,ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும்,50ccக்கு மேல் எஞ்சின் திறன் அல்லது 50 km/hக்கு மேல் வேகம் கொண்ட L2 வகை வாகனங்களுக்கு மட்டும்.திடீர் பிரேக்கிங் போது சறுக்கல் தடுக்கும் பாதுகாப்பு அம்சம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த புதிய விதிகள் தொடர்பாக comments-morth@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அனுப்பலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்த விதிகள், இருசக்கர வாகன பயணத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்குடன் அமையவுள்ளன என்பது கூடுதல் தகவல்.