6 புதிய மின் மாற்றிகள்.. அமைச்சர் கீதாஜீவன் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்!
தூத்துக்குடியில் 6 புதிய மின் மாற்றிகளை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
தூத்துக்குடியில் மேல அலங்கார தட்டு செயின்ட் மேரிஸ் காலனி தருவை மைதானம் ஐயப்ப நகர் இந்திரா நகர் மற்றும் திரு வி க நகர் ஆகிய பகுதிகளில் ரூபாய் 56 லட்சம் மதிப்பீட்டில், மொத்தம் 606 மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையிலான 6 புதிய மின் மாற்றிகளை (63 KVA திறன் கொண்ட ஒரு மின்மாற்றி, 100 KVA திறன் கொண்ட 5 மின்மாற்றிகள்) மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சஹர் பானு, செயற்பொறியாளர் நகர் (பொறுப்பு) சின்னதுரை, தமிழ்நாடு மின் பகிர்மான செயற்பொறியாளர் சந்திரசேகர், உதவி செயற்பொறியாளர்கள் உமையொரு பாகம், பிரேம்குமார், உதவி பொறியாளர்கள் குமார், சொரிமுத்து, ஜோசப், சத்யராஜ் ஆகிய மின்வாரிய அதிகாரிகள் மற்றும்
மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநகர அவைத் தலைவர் ஜேசுதாஸ், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் மேகநாதன், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், மாமன்ற உறுப்பினர்கள் ரெக்சலின், ஜெயசீலி, வட்டச் செயலாளர்கள் டென்சிங், ராஜா மணி, செல்வராஜ், சுரேஷ், மகளிர் அணி கமலி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.