மீண்டும் ஒரு நடிகை மீது பணமோசடி புகார்!

Loading

குங்பு வகுப்பில் பழகிய துணை நடிகை பணமோசடி செய்துவிட்டதாக ஐ.டி. ஊழியர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள சின்னத்திரை நடிகை ரிகானா பேகம் திருமண ஆசை காட்டி நகை, பணம் வாங்கி மோசடி செய்ததாக டி.வி. நடிகை மீது ஓட்டல் அதிபர் புகார் அளித்துள்ள சம்பவம் சமீபத்தில் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த பஞ்சாயத்து முடிவத்துக்குள் அடுத்த பஞ்சாயத்து ஒன்று வெளியே வந்துள்ளது.குங்பு வகுப்பில் பழகிய துணை நடிகை பணமோசடி செய்துவிட்டதாக ஐ.டி. ஊழியர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த கவுரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹரீஸ், தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது:, தான் தற்காப்பு கலையான குங்பு பயிற்சிக்கு செல்லும்போது சின்னத்திரை நடிகையான அனாமிகாவுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தோம்.

தொடக்கத்தில் தனக்கு கடன் பிரச்சினை இருப்பதாகவும் அதை சரி செய்தால்தான் திருமணம் செய்துகொள்ள முடியும் என கூறியதை நம்பி கேட்கும்போதெல்லாம் அனாமிகாவிற்கு பணம் கொடுத்ததாகவும் ,ஒரு கட்டத்தில் அனாமிகா அதிகமாக பணம் கேட்க தொடங்கியதாகவும், தான் முடியாது என கூற, சண்டைபோட்டுவிட்டு, பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறினார்.

இதுவரை சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றிய அனாமிகா,மாங்காடு காவல் நிலையத்தில் பணமே வாங்கவில்லை என நாடகமாடியதாக ஹரீஸ் தெரிவித்தார்.தனியார் டிவி சீரியலில் நடித்து வரும் அனாமிகா, யோகிபாபுவின் படத்தில் நடிக்க இருப்பதாக சுட்டிக்காட்டிய ஹரீஸ், தன்னுடைய பணத்தை மீட்டு தருவதோடு, அனாமிகாவிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என டிஜிபியிடம் முறையிட்டதாக கூறினார்.

0Shares