இரண்டாவது முறை ஓட்டம் பிடித்த தாய்..அவமானம் தாங்காமல் உயிரை விட்ட குடும்பம்!

Loading

தாய் இரண்டாவது முறை வேறொரு நபருடன் ஓடி சென்றதால் 2 பேத்திகளை கொன்று விட்டு பாட்டிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  ஒட்டன்சத்திரம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்குளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த,செல்லம்மாள் என்பவருடைய மகள் பவித்ராவுக்கும்  பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு  லிக்திக்ஷா , தீப்திஷா ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் பவித்ராவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டை விட்டு பைனான்சியருடன் சென்றார். அதன் பிறகு உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அவருக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வேலைக்கு வந்த கொத்தனாருடன் பேசி பழகிய பவித்ரா அதன் பிறகும் அவருடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.இந்த விபரம் 2 குழந்தைகள் உள்ள நிலையில் இது போன்ற விஷயம் ஊருக்கு தெரிய வந்தால் நமது குடும்பத்துக்கு அவமானம் என   கணவர் மற்றும் குடும்பத்தினர் அறிவுரை கூறியுள்ளனர்.

ஆனால் அதனையெல்லாம் கேட்காமல் கொத்தனாருடன் தொடர்ந்து பேசி வந்த பவித்ரா நேற்று திடீரென மாயமானார்.  இந்த விபரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்ததால் வீட்டில் வந்து விசாரிக்கத் தொடங்கினர். இதனால் மிகுந்த மனவேதனையடைந்த பவித்ராவின் தாய் காளீஸ்வரி ,தனது தாய் செல்லம்மாள் மற்றும் தனது பேத்திகள் 2 பேருடன் தற்கொலை செய்ய முடிவெடுத்து.

நேற்று இரவு  பேத்திகள் 2 பேரையும் தூக்கில் தொங்க விட்ட பாட்டிகள் இருவரும் பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.பின்னர் இது குறித்து இடையகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0Shares