5 வழிதடங்களுக்கான மினி பஸ் சேவையை.. அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 5 வழிதடங்களுக்கான மினி பஸ் சேவையை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்,
தமிழ்நாடு முதலமைச்சர் புதிய விரிவான மினி பஸ் திட்டத்தினை தஞ்சாவூரில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 5 வழிதடங்களுக்கான மினி பஸ் சேவையை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சசிகாந்த் செந்தில் , சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன், (திருவள்ளூர்), எஸ். சந்திரன் (திருத்தணி), டி.ஜே. கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி),.துரை சந்திரசேகர் (பொன்னேரி) ஆகியோர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்கள்.அப்பொழுது அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்ததாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் பேருந்து சேவை இல்லாத வழிதடங்களில் சிற்றுந்து சேவை வழங்கும் பொருட்டு, புதிய விரிவான (சிற்றுந்து) திட்டம் 2024 தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் பேருந்து சேவை இல்லாத வழித்தடங்களில் சிற்றுந்து சேவை புதிய விரிவான (சிற்றுந்து) 2024 பொருட்டு, அதற்கான அறிவிக்கை திருவள்ளூர் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது.மேற்படி அறிவிப்பினை தொடர்ந்து, 49 வழிதடங்களில் இயக்குவதற்கான விண்ணப்பங்கள் (திருவள்ளூர்,பூவிருந்தவல்லி, ரெட்ஹில்ஸ்) அலுவலகங்களில் பெறப்பட்டது.
வட்டார அந்தந்த போக்குவரத்து மேற்படியான 49 வழிதடங்களில் மினி பேருந்துகளை இயக்க 146 விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு, அவைகளில் 76 விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட போக்குவரத்து அதிகாரி,மாவட்ட ஆட்சியரால் அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அனுமதி சீட்டு வழங்கப்பட்ட வழிதடங்களில் மினி பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், பொது மக்கள் பயன்பாட்டிற்காக 05 வழிதடங்களான இஸ்லாம் நகர் முதல் சென்னை திருப்பதி சாலை, செங்குன்றம் பேருது நிலையம் முதல் வெளி வட்ட சாலை புழல் முகாம், பூவிருந்தவல்லியில் (மூன்று சேவைகளும்), ஆவடி முதல் கன்னடபாளையம், திருநின்றவூர் பேருந்து நிலையம் முதல் செங்குன்றம் வரை என முதற்கட்டமாக ஆகிய வழித்தடங்களுக்கான சேவையை பொது மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வழித்தடங்களுக்கான சேவைகளை படிப்படியாக தொடங்கி வைக்கப்படும் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
இதில் திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் உதயமலர் போக்குவரத்து வட்டார அலுவலர்கள் ராமகிருஷ்ணன் (திருவள்ளூர்),சிவானந்தம் (செங்குன்றம்), ரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) செல்வம் நகர் மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.