ரெட்டிக்குப்பம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி குழந்தைகள் மையம்..திமுக Ex.MLA திறந்து வைத்தார்!
திருப்போரூர் ஒன்றியம் கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி கானத்தூர் பகுதியில் XNORA ROTARY CLUB OF MADRAS இனைந்து ரூபாய்: 21,00,000/ மதிப்பில் புதிய அங்கன்வாடி குழந்தைகள் மையத்தை திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.இதயவர்மன் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி கானத்தூர் பகுதியில் XNORA ROTARY CLUB OF MADRAS இனைந்து ரூபாய்: 21,00,000/ மதிப்பில் புதிய அங்கன்வாடி குழந்தைகள் மையத்தை திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.எல்.இதயவர்மன் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பு அண்ணன் மாண்புமிகு தா.மோ.அன்பரசன் அவர்கள் ஆலோசனைப்படி ,திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.எல்.இதயவர்மன் Ex.MLA அவர்கள்குழந்தைகள் மையத்தை திறந்து வைத்தார்.
இன் நிகழ்சியில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் திரு.ஏ.ரமேஷ் அவர்கள், கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி: வள்ளிஎட்டியப்பன் அவர்கள், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் திரு.ஆர்.கோவிந்து அவர்கள், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் திரு.சிவமணி அவர்கள் , ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு.இஷ்மாயில் அவர்கள் , கிளை கழக செயலாளர்கள் திரு.எம்.சௌந்தரபாண்டியன் அவர்கள், திரு.ரியாஸ் அவர்கள், வார்டு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரிதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.