உல்லாசம் அனுபவித்து விட்டு கள்ளக்காதலி விலகியதால் வாலிபர் செய்த வெறிச்செயல்!

Loading

ஓட்டலில் உல்லாசம் அனுபவித்து விட்டு கள்ளக்காதலியை வாலிபர் ஒருவர் 17 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெங்களூரு அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக கொலையாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெங்களூரு கெங்கேரி அருகே வசித்து வந்த தம்பதி ஹரிணி மற்றும் அவருடைய கணவன் ஆகியோருக்கு தாசேகவுடா 2 குழந்தைகளும் உள்ளனர்.இந்தநிலையில் தான் கெங்கேரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் 3-வது நபர் மூலமாக ஹரிணிக்கும், தலகட்டபுராவை சேர்ந்த யசஷ் என்ற வாலிபருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது.

அதன்பிறகு, 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசிய நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தனது கணவருக்கு தெரியாமல் யசசை அவ்வப்போது சந்தித்து ஓட்டலில் அறை எடுத்து 2 பேரும் உல்லாசமும் அனுபவித்து வந்துள்ளனர்.இதையடுத்து வேறோரு வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதும், அவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வருவதும் தாசேகவுடாவுக்கு தெரியவந்துள்ளது.

உடனே அவர் தனது மனைவியை கண்டித்ததுடன் ஹரிணியிடம் இருந்து செல்போனையும் வாங்கி வைத்து கொண்டதாக தெரிகிறது. இதன் காரணமாக ஹரிணியை யசஷால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது.

அப்போது , நடந்த சம்பவங்களுக்கு தனது கணவரிடம் ஹரிணி மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வாலிபருடன் பேச மாட்டேன் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். இதையடுத்து, ஹரிணியிடம், தாசேகவுடா செல்போனை கொடுத்துள்ளார்.

ஆனாலும் கள்ளக்காதலன் யசஷ் உடனான தொடர்பை கைவிட முடியாததால், அவரை ஹரிணி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து, வழக்கம் போல கடந்த 6-ந் தேதி கெங்கேரி அருகே பூர்ணபிரஜா லே-அவுட்டில் உள்ள ஓட்டலில் சந்தித்து அங்கு வைத்து 2 பேரும் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

அப்போது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரிந்ததும் தன்னிடம் இருந்து திடீரென விலகி இருந்தது ஏன்? என்பது குறித்து ஹரிணியிடம் யசஷ் கேட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டபோது ஆத்திரமடைந்த யசஷ் தன்னிடம் இருந்த கத்தியால் ஹரிணியை கண்மூடித்தனமாக பல முறை குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

ஓட்டல் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஹரிணியின் உடலை கைப்பற்றி விசாாித்தனர். அப்போது ஹரிணியை அவரது கள்ளக்காதலன் யசஷ் தான் ஹரிணியை 17 முறை கத்தியால் குத்திக் கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு யசசை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது.

அதாவது கைதான யசஷ் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். அவர் ஹரிணிஇந்த விவகாரம் கணவருக்கு தெரிந்ததும், தன்னிடம் இருந்து ஹரிணி விலகி சென்றதால், அவரை தீர்த்து கட்டுவதற்கு யசஷ் முடிவு செய்துள்ளார். தனக்கு கிடைக்காத ஹரிணி வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

இதற்காக காத்திருந்த ஓட்டலுக்கு வருவதாக ஹரிணி சொன்னதும், அவரை தீர்த்து கட்டுவதற்காக கத்தியுடன் ஓட்டலுக்கு வந்துள்ளார். அங்கு ஹரிணியுடன் உல்லாசம் அனுபவித்து விட்டு 17 முறை அவரை குத்திக் கொன்றது தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின்பு நேற்று மாலையில் யசஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

0Shares