தனிமாநில தகுதி வேண்டி MLA தலைமையில் பொதுநல அமைப்புகள் கையெழுத்து இயக்க பரப்புரை!
முத்தியால்பேட்டை மார்க்கெட் பகுதியில் தனிமாநில தகுதி வேண்டி கையெழுத்து இயக்க பரப்புரை பயணம் சட்டமன்ற உறுப்பினர் நேரு அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டது.
புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி வேண்டி உருளையன்பேட்டைதொகுதி சட்டமன்ற உறுப்பினர்திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் மற்றும் பொதுநல அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தோழர்கள் தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக நேற்று முத்தியால்பேட்டை மார்க்கெட் பகுதியில் தனிமாநில தகுதி வேண்டி கையெழுத்து இயக்க பரப்புரை பயணம் சட்டமன்ற உறுப்பினர் நேரு அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டது.
அதில் பொதுநல அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு மாநில தகுதி ஏன் வேண்டுமென்ற கோரிக்கையை பரப்புரையாக செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி கையொப்பம் பெற்றனர்.
நிகழ்வில்லோக அய்யப்பன் திராவிட விடுதலை கழகம்,இர.மங்கையர் செல்வம்தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள்,பி.பிரகாஷ் &ராஜா தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்,சரவணன் புதுச்சேரி மக்கள் தமிழ்ச் சங்கம்,கோ.அழகர்தமிழர்களம்,இரா .முருகானந்தம்மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்,
இந்தியமஜிலிக்கட்சி,சி.ஸ்ரீதர்தமிழகவாழ்வுரிமைக்கட்சி,பஷீர்பிபோல்டுகூட்டமைப்பு,ஏ.விநாயகம்மனிதநேய மக்கள் சேவை இயக்கம்,கணேசன் ஆம்ஆத்மி,பரகத்துல்லா எஸ்டிபிஐ கட்சி,ரமேஷ் நாம் தமிழர் கட்சி,ஜெ.பிராங்கிளின் இயற்கை மன்றும் கலச்சாரபுரட்சி இயக்கம் ,ஆ.பாவாடைராயன் அம்பேத்கர் தொண்டர் படை,சு.சாமிநாதன்மாணவர் கூட்டமைப்பு,புதுவைதமிழ் நெஞ்சம்புதுச்சேரி எழுத்தாளர்கழகம்,தூ.சடகோபன்புதுச்சேரிதன்னுரிமைகழகம்,கி.தாமரைகண்ணன்மற்றும் புதுச்சேரிபொதுநலஅமைப்புகளை சேர்ந்த தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்…