காகிதம் இல்லா சட்டப்பேரவை..தேசிய இ- விதான் செயலியை தொடங்கி வைத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!
புதுச்சேரி சட்டப்பேரவையை காகிதம் இல்லா சட்டப்பேரவையாக மற்றும் விதமாக தேசிய இ-விதான் செயலியை மத்திய பாராளுமன்ற விவகாரங்கள்துறை இணையமைச்சர் எல்.முருகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
2-நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள புதுச்சேரி வருகை தந்துள்ள மத்திய இணை அமைச்சர் முருகனை பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி, அமைச்சர் சாய் சரவணன், சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் ஆகியோர் வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையை காகிதம் இல்லா சட்டப்பேரவையாக மற்றும் விதமாக தேசிய இ-விதான் செயலி தொடக்க விழா தனியார் விடுதியில் நடைபெற்றது. மத்திய பாராளுமன்ற விவகாரங்கள்துறை இணையமைச்சர் எல்.முருகன் குத்துவிளக்கேற்றி இ-விதான் செயலியை தொடங்கி வைத்தார். துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சரவணன்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, தலைமைச் செயலர் சரத் சௌகான், மத்திய அமைச்சக செயலர் உமங் நருலா, கூடுதல் செயலர் சத்திய பிரகாஷ், புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.