நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் தேதி அறிவிப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கி பட்ஜெட் தாக்கல், நிறைவேற்றம், மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், நிதி மசோதா உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடைபெற்று வந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 4ஆம் தேதியுடன் 2025ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நிறைவு பெற்றது.
ஆண்டுக்கு மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப்படுவது வழக்கம்.முதல் கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் இரண்டாவது அதாவது மழைக்கால கூட்டத்தொடர், வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை இந்த மாதமே கூட்டும்படி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தநிலையில் மத்திய மந்திரியின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இரண்டாவது மழைக்கால கூட்டத்தொடர்,மற்றும் மூன்றாவதாக குளிர்கால கூட்டத்தொடர்.இந்த இரண்டிலுமே பெரும்பாலும் மசோதாக்கள் நிறைவேற்றம் உள்ளிட்ட அரசு அலுவல்களே பிரதானமாக இருக்கும் என எதிர்பாக்கலாம்.