கேலோ இந்தியா பீச் வாலிபால் போட்டியில் இரண்டாம் பரிசு..சந்திர பிரியங்கா MLA விடம் வாழ்த்து பெற்ற வீராங்கணை!
கேலோ இந்தியா பீச் வாலிபால் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதியை சேர்ந்த சசிகலா மற்றும் கனிமொழி ஆகியோர் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.Dr.சந்திர பிரியங்கா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
குஜராத் மாநிலம் டையூவில் கடந்த மாதம் 19.05.2025 முதல் 24.05.2025 வரை நடைபெற்ற கேலோ இந்தியா பீச் வாலிபால் 2025 போட்டி நடைபெற்றது.இந்த கேலோ இந்தியா பீச் வாலிபால் போட்டியில் புதுச்சேரி அணி ஒன்றின் சார்பில் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதியை சேர்ந்த சசிகலா மற்றும் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டு விளையாடினர்.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தனர்.
புதுச்சேரி அணிக்காக கலந்து கொண்டு விளையாடி இரண்டாம் பரிசு பெற்ற காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதியை சேர்ந்த சசிகலா மற்றும் கனிமொழி ஆகியோருக்கு புதுச்சேரியில் உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.Dr.சந்திர பிரியங்கா அவர்களை அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து சசிகலா மற்றும் கனிமொழி ஆகியோர் வாழ்த்து பெற்றனர்…