வேல் பூஜை வழிபாடு செய்த இந்து முன்னணியினர்!

Loading

22.6.2025 ஞாயிற்றுக்கிழமை ,மதுரை அம்மா திடலில் மாநிலம் தழுவிய முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளதை ஒட்டி ஆண்டிபட்டியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் வேல் பூஜை வழிபாடு செய்து வழிபட்டனர்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் பாப்பம்மாள்புரத்தில் உள்ள கம்மவார் உறவின்முறை கட்டிடத்தில், இந்து முன்னணி அமைப்பின் சார்பில் வேல் பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வருகின்ற ஆனி மாதம் 8 ஆம்தேதி 22.6.2025 ஞாயிற்றுக்கிழமை ,மதுரை அம்மா திடலில் மாநிலம் தழுவிய முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது .

அதன் அடிப்படையில் நேற்று இந்து முன்னணி ஆண்டிபட்டி நகர் ,ஒன்றியம் சார்பாக, பழனி பாதயாத்திரை பக்தர்கள் கொண்டு செல்லும் முருகப்பெருமானின் வேலுக்கு ,வேல் பூஜையும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோட்ட செயலாளர் கணேசன் ஜி, மாவட்ட பொதுச்செயலாளர் பாலமுருகன் ஜி, ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட செயலாளர் ஆச்சி கார்த்திக் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் சுந்தர் ஜி சிறப்புரையாற்றினார். இந்து முன்னணி நிர்வாகி மொக்கராஜ் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆண்டிபட்டி பொதுச் செயலாளர் ராஜ்குமார் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர். விழாவில் பழனி பாதயாத்திரை குழு தண்டாயுதபாணி, வெங்கடேசன், ஜெகநாதன், ஜெய்சங்கர் உள்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

0Shares