வளர்ப்பு மகள் தான் வாழ்ந்து வரும் வீட்டை அபகரிக்க முயற்ச்சி.. தாய் பரபரப்பு பேட்டி!
தாம்பரம் அருகே வளர்ப்பு மகள் தான் வாழ்ந்து வரும் வீட்டை அபகரிக்க நினைப்பதோடு அவர் கணவருடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுவதாக தாய் பரபரப்பு பேட்டி அளித்தார்.
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் சேர்ந்தவர் கஜலஷ்மி- பார்த்தசாரதி தம்பதியினர் திருமாணகிபத்து ஆண்டுகளுக்கு குழந்தை இல்லாத நிலையில் தனது அக்காவின் மகளை தத்தெடுத்து கஜலட்சுமி பார்த்தசாரதி தம்பதியினர் வளர்த்துள்ளனர். அதன் பிறகு இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது
1995 ஆம் ஆண்டு பார்த்தசாரதி உயிரிழந்த நிலையில் கஜலட்சுமி பணிக்குச் சென்று மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி உள்ளார்.கஜலட்சுமியின் வளர்ப்பு மகளான அமுதவல்லிக்கு 2016 ஆம் ஆண்டு சூளைப் பகுதியில் சேர்ந்த தாமரை செல்வம் என்பவருக்கு 40 சவரன் வரனாக கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் சிட்லபாக்கத்தில் உள்ள தனது வீட்டில் கல்யாணம் ஆகாத இரண்டு மகன்களுடன் கஜலட்சுமி வாழ்ந்து வந்துள்ளார்.கஜலட்சுமியின் வளர்ப்பு மகள் மற்றும் மருமகன் கஜலட்சுமி வசித்து வரும் வீட்டை அபகரிக்க நினைத்ததோடு அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் தன்னையும், கேன்சரால் பாதிக்கப்பட்ட தனது மகனையும் வீட்டை விட்டு விரட்டும் வகையில் பல்வேறு தொல்லைகள் கொடுத்து வந்தனர். உயிர் பயத்தால் தாங்கள் தற்போது எங்களுக்கு சொந்தமான வீட்டில் கூட வசிக்கமுடியவில்லை என்றும், என வளர்ப்பு மகள் என ஓய்வுதிய பென்சன் கணக்குக்கு நாமினியாக்குமாறு மிரட்டி, வங்கியில் முடக்கி வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
புகார் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் சிட்லபாக்கம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் இன்று தனது மூத்த மகன் சந்திரசேகரனுடன் வந்த கஜலட்சுமி காவல் உதவி ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கஜலட்சுமி தன்னுடைய ஓய்வுதிய பணத்தை வளர்ப்பு மகள் அமுதவள்ளி முடக்கிவிட்ட நிலையில் தாங்கள் வசித்து வரும் வீட்டை அபகரிக்கும் நோக்கில் மருமகன் உடன் என் மகனுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்தார்.
பின்னர் பேசிய கஜலட்சுமியின் மூத்த மகன் சந்திரசேகரன் கூறுகையில் அக்கா அமுதவள்ளியின் கணவர் தாமரை செல்வன் சூலைப்ப பகுதியில் பெரிய தாதா எனவும் உன்னை கொலை செய்து விடுவேன், என கொலை மிரட்டல் விடுத்த நிலையில் தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும் கூறினார்.
மேலும் தன்னுடைய சகோதரர் நரேந்திரனின் பாகத்தை, எனக்கும் என் அம்மாவையும் ஏமாற்றி அவருடைய சொத்து பாகத்தை எழுதி எடுத்துக் கொண்டதாக புகார் தெரிவித்தார்.தான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் தற்போது எனது பெற்றோர்களின் வளர்ப்பு மகளால் தாங்கள் கடும் இன்னலை சந்தித்து வருவதாக கூறினார்.
சேலையூர் உதவி காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக பாதிக்கப்பட்டோர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த காவல் உதவி ஆணையர் அவர்களை உரிமையியல் பேசி “ஏன் இங்க இருந்து பேட்டி கொடுக்கிற போ அங்கு ரோட்ல இருந்து கொடு போ ஸ்டேஷன் நல்லா இருக்கு கொடுக்க கூடாது” என கடிந்து கொண்டார்…