அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் கும்பாபிஷேக மண்டல பூஜை விழா !
அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் கும்பாபிஷேக மண்டல பூஜை விழா !
சேலம் மாவட்டம் சேலம் மேற்கு வட்டம் முருங்கப்பட்டி கிராமம் பெத்தாம்பட்டியில் 1957-ம் ஆண்டு காலத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவிலை பள்ளிக்கொடத்த கவுண்டர் பி.கே சின்ன கந்தசாமி கவுண்டர் என்பவர் சாமி சிலையை வைத்தார். அவரால் கோயிலை கட்டுவதற்கு யாரும் முன் வரவில்லை அதன் பிறகு 68 -வருடத்திற்கு பிறகு செந்தில் முருகன் என்பவர் இந்த கோயிலை புதுப்பித்து கோயிலை கட்டினார்.
பின்பு சிறப்பான முறையில் மஹா கும்பாபிஷேக விழாவை சீரும் சிறப்போடும் நடத்தினார் பின்பு மஹா கும்பாபிஷேக மண்டல பூஜை இன்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று யாகசாலைகள் மகாயாகம் நடைபெற்று மாலை 5 மணிக்கு 1000-க்கு மேல் திருவிளக்கு பூஜையில் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .
இவ்விழாவில் ஊர் கவுண்டர் கோவில் தர்மகர்த்தா செந்தில் முருகன், முருகேசன், தினேஷ், சரவணன், கோபால் கணேசன் முத்துசாமி, தம்பிதுரை , கார்த்திக், ரவி கோவிந்தராஜ், சதீஷ், சந்தோஷ், பழனிசாமி, தங்கராஜ், அறிவழகன்,கோவில் பூசாரி ஜெயமுருகன், மற்றும் பெத்தாம்பட்டி ஊர் பொதுமக்கள் கோவில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார் பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.