வேலூர் பீஞ்சமந்தை ஊராட்சியில் புதிய மாணவர் விடுதி திறப்பு !
வேலூர் பீஞ்சமந்தை ஊராட்சியில் புதிய மாணவர் விடுதி திறப்பு !
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் பீஞ்சமந்தை ஊராட்சி கிராமத்தில் புதிய மாணவர் விடுதி திறப்புவிழா நேற்று நடைபெற்றது.
இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.இரா.சுப்புலட்சுமி வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார்,கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்த வைத்தார்கள்.
இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, ஆவின் பொது மேலாளர் இளங்கோவன், கூட்டுறவு சங்கத்தின் இணைப்பதிவாளர் ச.திருகுணஐயத்துரை, ஒன்றிய குழு பெருந்தலைவர் C.பாஸ்கரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் N.பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ரேகா வார்டு கவுன்சிலர்கள் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் உள் பட பலர் கலந்து கொண்டனர்.