பெயிண்டர்களுக்கு விபத்து காப்பீட்டு அட்டை..கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் சுப்ராயுலு வழங்கினார்!

Loading

கள்ளக்குறிச்சியில் உழைப்பாளர் தினத்தையொட்டி ஓவியர்கள் சங்கத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் சுப்ராயுலு கலந்து கொண்டுபெயிண்டர்களுக்கு விபத்து காப்பீட்டு அட்டைகளை வழங்கினார் .

கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா பொதுக்கூட்ட மேடையில் தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கத்தின் சார்பில் ஐந்தாம் ஆண்டு மே தின விழா தலைமை மாநில இணை அமைப்பு செயலாளர் டிகே.மணிவண்ணன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் கணகராஜ், மாவட்ட ஐடி விங்க் செயலாளர் ராம் பிரகாஷ், முன்னிலையிலும், கள்ளக்குறிச்சி நகர நிர்வாகிகள் கௌரவத்தலைவர் துரைராஜ், தலைவர் சம்பத்,நகரசெயலாளர் மணிகண்டன்,நகர பொருளாளர் பிரதாப், இவர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் சுப்ராயுலு கலந்து கொண்டு பெயிண்டர்களுக்கு விபத்து காப்பீடு திட்ட அட்டையினையும் உறுப்பினர் அடையாள அட்டையினையும் வழங்கினார் .தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கத்தின் சார்பில் ரத்த தானம் வழங்கப்பட்டது மேலும் பெயிண்டர்களுக்கு உதவித்தொகை மற்றும் பெண் பெயிண்டர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட அவற்றையும் வழங்கி தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கத்தின் சார்பில் மே தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

0Shares