பள்ளி மாணவர்களுக்கு வீட்டுத்தோட்டம் அமைப்பை பற்றி எடுத்துரைத்த வேளாண்மை பல்கலைக்கழ மாணவர்கள்!

Loading

உதகை நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு பயிலும் மாணவர்களுக்கு விவசாயத்தின் பேரில் பற்றுதலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் விதமாக வீட்டுத்தோட்டம் அமைப்பை பற்றி எடுத்துரைத்தனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவையிலிருந்து “ஊரக தோட்டக்கலை பணி அனுபவம்” செயல்பாட்டிற்கு இளமறிவியல் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் முகாமிட்டுள்ளனர்.

இதனடிப்படையில் அவர்கள் உதகை நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு பயிலும் மாணவர்களுக்கு விவசாயத்தின் பேரில் பற்றுதலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் விதமாக வீட்டுத்தோட்டம் அமைப்பை பற்றி எடுத்துரைத்தனர்.மேலும் தலைமை ஆசிரியர்.ந.கீதா மார்கரேட்,அவர்களின் அனுமதியுடன் மாணவர்களுக்கு செயல்விளக்கமாக செய்து காண்பித்தனர்.

தோட்டக்கலை மாணவர்களான க.தாமோதரன், பெ.பாலாஜி சு.சந்துரு, ஆ.ஹரிஹரன், க.கவியரசு, ப.மதுஅபிலன், மு.காளிதாசன் ஆகியோர் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

0Shares