உபதலை மூன்று ரோடு பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளினால் சுகாதார சீர்கேடு!
உபதலை மூன்று ரோடு பிரிவு அருகே உள்ள கக்கநகர் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளினால் இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
குன்னூர் உபதலை ஊராட்சிக்குட்பட்ட உபதலை மூன்று ரோடு பிரிவு அருகே உள்ள கக்கநகர் பகுதியில் குப்பைகள் அள்ளபடாததால் தேங்கியுள்ள குப்பைகளினால் இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்து தரப்பு மக்களுக்கும் சுகாதார சீர்கேடு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு தேங்கியுள்ள குப்பைகளை சுத்தம் செய்யவும்,வரும் நாட்களில் இது போன்று குப்பைகள் சேரமால் தொடர்ந்து சுத்தம் செய்ய குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் உபதலை ஊராட்சி அலுவலகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.