பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிர் அணியினர் போராட்டம்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பெண்களை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலை இந்தியன் வங்கி எதிரில் அதிமுக மகளிர் அணி சார்பில் பெண்கள் மற்றும் சைவ-வைணவ சமயங்களை இழிவு படுத்தி பேசிய திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், அமைச்சர் பதவியில் இருந்தும் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய திமுக முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்திம் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர். V.R .பிரித்திவிராஜ். தலைமையிலும்,மாவட்ட மகளிர் அணி தலைவர் . மல்லிகா. முன்னிலையிலும் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் காவேரி. கலந்துக் கொண்டு கண்ட உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கு. கண்ணன்,செஞ்சி மேற்கு ஒன்றிய செயலாளர் அ.கோவிந்தசாமி, செஞ்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் க.சோழன்,அனந்தபுரம் பேரூர் கழக செயலாளர் .சங்கர், பொதுக்குழு உறுப்பினர் சுலோச்சனாஜெயபால், மேற்கு ஒன்றிய மகளிரணி செயலாளர் .வளர்மதி, செஞ்சி கிழக்கு ஒன்றிய மகளிரணி செயலாளர் .கமலா செஞ்சி நகர துணை செயலாளர் .அமுதா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும்பெண்கள் பலர் கலந்துக் கொண்டனர்.