ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உட்படகட்டுமான பொருட்களின் விலைஉயர்வு
ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உட்படகட்டுமான பொருட்களின் விலைஉயர்வினை மறுபரிசீலனை செய்ய தமிழக முதல்வருக்கு பெயிரா வேண்டுகோள்
தமிழகத்தில் கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தினர் 22.04.2025 முதல் கட்டுமான பொருட்களான தயாரிப்பு மணல், ஜல்லி உள்ளிட்ட பொருட்களின் மீதான கடும் விலை உயர்வினை அறிவித்துள்ளார்கள். தமிழக அரசு கட்டுமான பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவரும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த பொதுமக்கள், ஒப்பந்ததாரர்கள், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையினை சார்ந்தவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றத்தையும், பேரதிர்ச்சியினையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அனைத்து தரப்பினரின் நலன் கருதி விலை உயர்வினை மறுபரிசீலனை செய்து முறையான விலையினை நிர்ணயிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டு நாடும் – ஏடும் – நாளும் போற்றும் வகையில் மிகச் சிறப்பான முறையில் முதல்வரின் (தங்களின்) சீரிய தலைமையின் கீழ் ஆட்சி புரிந்து வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது.
மனிதனின் அடிப்படை வாழ்வியலில் உணவு, உடை, இருப்பிடம் என்பது மிகவும் அத்தியாவசியமாகவும், இன்றியமையாததாகவும் உள்ளது என்பது தங்களுக்கு நன்கு தெரியும்.
திராவிட மாடல் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு சமீபகாலமாக கட்டுமான பொருட்களின் விலை மனிதனை மெல்ல கொள்ளும் விஷத்தை போன்று, கண்ணை கட்டும் அளவிற்கும் – விண்ணை முட்டும் அளவிற்கும் செயற்கையான முறையில் உச்சபட்சமாக உயர்ந்து வருகிறது. உயர்ந்து வரும் கட்டுமான பொருட்களின் விலையினை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து பெயிரா கூட்டமைப்பின் சார்பாக FAIRA கடித எண்: 078 தேதி: 25.03.2025 அன்று தங்களுக்கு கடிதம் எழுதி இருந்தோம்.
அக்கடிதத்தில் கட்டுமான பொருள்களின் விலை ஏற்றதற்கு முக்கிய காரணிகளாக இருப்பது மைய அரசு மற்றும் மாநில அரசுகள் கட்டுமான சார்ந்த பொருட்களின் மீது விதிக்கப்படும் அதிக வரி விதிப்பு, குவாரி உரிமையாளர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்படும் கட்டுமான பொருட்களின் தட்டுப்பாடு, எரிபொருட்களின் விலை ஏற்றத்தினால் ஏற்படும் போக்குவரத்திற்கான செலவு போன்றவைகள் என குறிப்பிட்டு இருந்தோம்.
கட்டுமான பொருட்களின் விலை ஏற்றதற்கு முக்கிய காரணியாக இருப்பது கல் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் அனுமதி பெற்று 3,000க்கும் மேற்பட்ட கருங்கல் குவாரிகள், 4,800 கல் உடைக்கும் கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான குவாரிகள், கிரஷர்கள் தனியார் நிலங்களில் செயல்படுகின்றன. குறிப்பாக தமிழகத்தில் அனுமதி பெற்று செயல்படும் குவாரிகளில் முன்னறிவிப்பின்றி தான்தோன்றித்தனமாக திடீர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து, அதன் மூலம் செயற்கையான கட்டுமான பொருட்களின் தட்டுப்பாட்டனை உருவாக்கி அரசிற்கும் பொது மக்களுக்கும் நெருக்கடியை உண்டாக்கி, ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உட்பட கட்டுமான பொருட்களின் விலையினை உயர்த்திக் கொள்ளும் தந்திரத்தினை கடைபிடித்து கல் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் தங்களின் காரியத்தை சாதித்து வருகிறார்கள்.
இதற்கு சமீபத்தில் நடந்த கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். சிறு கனிம நிலவரி உள்ளிட்ட 24 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16.04.2025 ஆம் தேதி முதல் முதல் தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசு கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு, 21.04.2025 அன்று தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன், கல் குவாரி, கிரஷர் சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, உரிமையாளர்கள் தங்களுக்கு சாதகமாக ஜல்லி, மணல் உட்பட கட்டுமான பொருட்களின் விலையினை உயர்த்தி கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியது.இதனை தொடர்ந்து கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் 22.04.2025 முதல் உயர்த்தப்பட்ட கட்டுமான பொருட்களின் விலை பட்டியல் விவரமானது தயாரிப்பு மணல் (M-Sand) ₹.5000 இல் இருந்து ₹.6000 ரூபாயகவும், பூச்சு மணல் (P-Sand) ₹.6000 இல் இருந்து ₹.7000 ரூபாயாகவும், ஜல்லி ₹.4000 இல் இருந்து ₹.5000 ரூபாய் என கட்டுமான பொருட்களின் விலையானது 30% சதவீதம் என்கிற அளவிற்கு உச்சபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு குவாரி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் முறையான கண்காணிப்பு மற்றும் ஆய்வினை மேற்கொள்ளாததன் காரணமாக, குவாரி உரிமையாளர்கள் தன்னிச்சையாகவும், தான்தோன்றித்தனமாகவும் அரசின் சட்டதிட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மீதான துளியளவு அச்சமின்றி தங்கள் விருப்பம் போல் செயல்படுவதற்கு முக்கிய காரணம் என கட்டுமான துறையின் நீண்ட நெடிய அனுபவம் வாய்ந்த மூத்த முன்னோடிகளும், நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
மேற்கண்ட வகையில் ஜல்லி,மணல் உட்பட கட்டுமான பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதின் காரணமாக கட்டுமானத்துறை நலிவடைந்து – மெல்லக் கொள்ளும் விஷத்தை போன்று மேலும் அதாலபாதாளத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வித அடிப்படை காரணமும் இன்றி, கட்டுமான பொருட்களின் விலை அடிக்கடி உச்சபட்சமாக உயர்ந்து வருவதின் காரணமாக, தனியார் கட்டுமான நிறுவனங்களும், கிராமப்புறங்களில் கிராம நத்தம் மனைகளிலும், பட்டா மனைகளிலும், நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களிலும் மைய மற்றும் மாநில