திட்டத்தின் நோக்கம் மற்றும் அரசின் பங்களிப்பு..மக்களுக்கு விளக்கமளித்த நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர்!

Loading

நீலகிரி மாவட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், கலந்து கொண்டு, திட்டத்தின் நோக்கம் மற்றும் அரசின் பங்களிப்பு ஆகியவை பற்றி பயனாளிகளுக்கு எடுத்துரைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், “கலைஞர் கைவினைத் திட்டத்தை” தொடங்கி வைத்து, 8,951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய் வழங்கி விழா பேருரை ஆற்றியதை தொடர்ந்து,

நீலகிரி மாவட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், கலந்து கொண்டு, திட்டத்தின் நோக்கம் மற்றும் அரசின் பங்களிப்பு ஆகியவை பற்றி பயனாளிகளுக்கு எடுத்துரைத்தார்கள். உடன் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் திலகவதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதானந் கலகி திட்ட பயனாளிகள் உட்பட பலர் உள்ளனர்.

0Shares