மாளிகம்பட்டு ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11வது கிளை மாநாடு!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 11வது கிளை மாநாடு நடைபெற்றது.
மாளிகம்பட்டு சுடுகாட்டு பாதைக் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரப்புகளை தார்சாலையாக அமைத்து கொடு, பல ஆண்டுகளாக மாளிகம்பட்டு கிராமத்தில் கரும காரிய கொட்டகை இல்லாத அவல நிலை புதிதாக அமைத்து கொடு,மாளிகம்பட்டு கிராமத்தில் சமுதாயக்கூடம் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிடு,
மாளிகம்பட்டு ஆதிதிராவிடர் பகுதிகளில் 250 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடு கட்டித் தரப்பட்டது தற்போது அந்த தொகுப்பு வீடுகள் சிதலம்அடைந்து மழைக்காலங்களில் மக்கள் வசிக்கும் முடியாத நிலையில் உள்ளது அந்தத் தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு மாற்று தொகுப்புவீடு புதிதாக கட்டிக் கொடு, ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 11-வது கிளை மாநாடு துணை செயலாளர் ஆனந்த், தலைமையில் நடைபெற்றது.
ஏழுமலை, இஷ்டலிங்கம்,லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தினர். பாஸ்கர் மாவட்ட பொருளாளர், வெங்கடேசன் ஒன்றிய செயலாளர் லாரன்ஸ், லட்சுமி, மணிவண்ணன்,மாவட்ட குழு. தணிகாசலம், வள்ளி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்கள். கிளை நிர்வாகிகள் ஸ்ரீதர், செயலாளர் அருண், சாமிநாதன், பரிமளா காந்தி, சுதா, லட்சுமி, பழனியம்மாள், செல்வி, பாலகிருஷ்ணன், நாகஜோதி, ஞானசேகர், தமிழ், ஆகிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.