35 இலட்சம் மதிப்பில் புதிய கான்கிரீட் சாலை..மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, நேற்று திறந்து வைத்தார்!
35 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கான்கிரீட் சாலையை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே. இரா. சுப்புலெட்சுமி, நேற்று திறந்து வைத்தார்.
டி.வி.எஸ் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜார்த்தான்கொல்லை ஊராட்சியை சேர்ந்த எலந்தபுதூர் கிராமம் முதல் குண்டுராணி கிராமம் வரை 600 மீட்டர் நீளத்திற்கு ரூபாய் 35 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கான்கிரீட் சாலையை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே. இரா. சுப்புலெட்சுமி, நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் தலைவர் ஸ்வரன் சிங், இ.ஆ.ப.(ஓய்வு), அறக்கட்டளையின் கல்வியியல் ஆலோசகர் பழனிச்சாமி, இ.ஆ.ப., (ஓய்வு), மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மு. பாபு, ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குநர்நீ. செந்தில். குமரன், ஜார்த்தான்கொல்லை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி லதா ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரி. திருமதி ஹேமலதா. அணைக்கட்டு வட்டாட்சியர் திருமதி வேண்டா உட்பட பலர் கலந்து கொண்டனர்